Pages

படிக்க...

pimp myspace with Gickr

அறிவிப்பு

இந்த வலைப்பக்கத்தை தமிழ்மணம் ‘ PAID AGGREGATION Category’ யில் வகைப்படுத்தி இருப்பதால், தமிழ்மணம் திரட்டியில் இணைக்கவில்லை. வாசகர்கள் google reader / e-mail subscriptions மூலமாக தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டுகிறோம்.

Subscribe in a reader

Subscribe to தீக்கதிர் by Email

Friday, April 8, 2011

வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்த திமுகவினர் கைது!

மதுரையில் பல்வேறு இடங்களில் வாக்காளர் களுக்குப் பணப்பட்டுவாடா செய்த திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை தெற்குத் தொகுதிக்குட்பட்ட தெற்குவெளி வீதி தில்லைநாயகம் தெரு வைச் சேர்ந்தவர் சுந்தர்(38). திமுக 43 வது வார்டு இளை ஞரணி துணைச்செயலாள ராக உள்ளார். இவர் அப் பகுதியில் வாக்காளர்களுக் குப் பணப்பட்டுவாடா செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பார் வர்ட் பிளாக் இளைஞரணி செயலாளர் பிச்சை, சுந்த ரைப் பிடித்து தெற்குவாசல் காவல்நிலையத்தில் ஒப்ப டைத்தார். அவரிடமிருந்து 17 ஆயிரத்து 310 ரூபாயை பறிமுதல் செய்த காவல் துறையினர் சுந்தரை கைது செய்தனர்.

மதுரை சுந்தராஜபுரம் பகுதியில் திமுகவைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவர் வாக்கா ளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்து கொண்டிருந்தார். தேர்தல் துணைக்கண்கா ணிப்பாளர் ஜெயராமன், வாக்காளர் ஜாவீதா ஆகி யவற்றுடன் ஜெகதீசனைப் பிடித்து ஜெய்ஹிந்த்புரம் காவல்நிலையத்தில் ஒப்ப டைத்தார். அவர்கள் ஜெக தீசனை கைது செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாடக்குளம் அம்பேத்கர் சிலை அருகில் ஒரு வேனில் வாக்காளர்க ளுக்குப் பணப்பட்டுவாடா செய்வதாக தேர்தல் அதி காரிகளுக்கு தகவல் கிடைத் தது. அங்கு சென்ற தேர்தல் கண்காணிப்பாளர் ஜெய சிங் ஞானதுரை, வாக்காளர் களுக்குப் பணம் பட்டு வாடா செய்து கொண்டி ருந்த 69 வது வார்டு திமுக துணைச்செயலாளர் பரம சிவம் என்பவரைப் பிடித்து சுப்ரமணியபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத் தார். பரமசிவத்திடமிருந்து வாக்காளர்களுக்கு தருவதற் காக வைத்திருந்த 4900 ரூபா யை பறிமுதல் செய்த காவல் துறையினர், அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை கோகுல்நகர் குறிஞ்சி தெருவில் திமுக வைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவர் வாக்காளர்களுக் குப் பணப்பட்டுவாடா செய்து கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தேர்தல் கண்காணிப்பாளர் ஜெயசிங் ஞானதுரை அவ ரைப் பிடித்து சுப்ரமணிய புரம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். ஜெகதீ சனை கைது செய்து அவரி டமிருந்து 7260 ரூபாயை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

மேலூர்

மேலூர் தாலுகா பதி னெட்டாங்குடியைச் சேர்ந் தவர் ராமசாமி. இவரது மகன் ராமமூர்த்தி. திமுக கிளைச்செயலாளராக பொறுப்பு வகிக்கும் இவர், திமுக வேட்பாளர் ராணி கொடுத்த ஆலோசனையின் அடிப்படையில் 500 ரூபாய் நோட்டுகள் 35ஆயிரத்தை எடுத்துக்கொண்டு பணப் பட்டுவாடாவிற்கு புறப்பட் டார். 500 ரூபாய் நோட்டு களை 100 ரூபாய்களாக மாற்றுவதற்காக கொட் டாம்பட்டி-சிங்கம்புணரி சாலையில் உள்ள ஒரு பெட் ரோல் நிரப்பும் நிலையத்திற்கு சென்று சில்லரை மாற்றி யுள்ளார். இது பற்றிய தக வல் கிடைத்தவுடன் விரைந்து சென்ற தேர்தல் அதிகாரிகள் ராமமூர்த்தி மீது வழக்கு பதிவு செய்து கைது செய் தனர். பின் அவர் ரிமாண்ட் செய் யப்பட்டார்.

எழுமலை


எழுமலை மேற்கு தெரு வில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய முயன்ற தி.மு.க.,வை சேர்ந்த குருசாமி, செல்லபாண்டி, ஜெயபாலை பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர். மூன்று பேரையும் எழு மலை இன்ஸ்பெக்டர் தின கரன், எஸ்.ஐ.,பாஸ்கரன் கைது செய்தனர். 3000 ரூபா யை பறிமுதல் செய்தனர்.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...