Pages

படிக்க...

pimp myspace with Gickr

அறிவிப்பு

இந்த வலைப்பக்கத்தை தமிழ்மணம் ‘ PAID AGGREGATION Category’ யில் வகைப்படுத்தி இருப்பதால், தமிழ்மணம் திரட்டியில் இணைக்கவில்லை. வாசகர்கள் google reader / e-mail subscriptions மூலமாக தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டுகிறோம்.

Subscribe in a reader

Subscribe to தீக்கதிர் by Email

Monday, April 11, 2011

அப்படி போடு!


அவர்கள் சீரியஸாகத்தான் பேசுகிறார்கள்.நமக்குத்தான் சிரிப்பு வருகிறது... :-))))

  • "ஆறாவது முறையாக கலைஞரே முதலமைச்சராக அமர்வார்” தமிழக துணை முதல்வர் ஸ்டாலின், பிரச்சாரத்தில்.


    • வயதானவர்களுக்கெல்லாம் முதல்வர் பதவி தேவையா?” ராகுல் காந்தி கொச்சி பொதுக் கூட்டத்தில்.

      • தி.மு.க அணியில் ஒருவருக்கொருவர் வெற்றிக்கு பாடுபடும் கட்சிகள்தாம் இணைந்துள்ளன” கவிஞர் கனிமொழி, எம்.பி.

        • "ஆளும் கட்சி மீது குறை சொல்வதற்கு வேறு எதுவும் காரணம் கிடைக்கவில்லை என்ற நிலையில், எதிர்க்கட்சியினர் சொல்லக் கூடிய ஒரே குற்றச்சாட்டு விலைவாசி உயர்வுதான். யார் ஆட்சியிலிருந்தாலும், இந்தக் குற்றச்சாட்டினைத்தான் எதிர்க்கட்சியினர் வழக்கமாகக் கூறுவார்கள்” தமிழக முதல்வர் கருணாநிதி.

          • 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தண்டனையிலிருந்து தப்பவே முடியாது”-மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி, கொச்சியில் செய்தியாளர்களிடம்.

          • மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதற்காக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசைப் பாராட்ட வேண்டும்”-மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் பெங்களூரில் செய்தியாளர்களிடம்.

            • எனவே, நமக்கு வேண்டியதெல்லாம் ஊழல் அற்ற, ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்றுகிற தி.மு.க ஆட்சிதான் வேண்டுமே தவிர ஊழல் ஆட்சியல்ல!”-திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி (சங்ககிரி பொதுக்கூட்டத்தில்)

              • பா.ஜ.கவுக்கும், ஜனதாக் கட்சிக்கும் கொள்கை வித்தியாசம் எதுவும் இல்லை. எங்கள் கட்சியினர் பத்து பேரை எம் எல் ஏவாக வெற்றி பெறச் செய்தால் தமிழ்நாட்டில் யாரையும் ஊழல் செய்ய விட மாட்டோம்” ஜனதாக் கட்சித்தலைவர் சுப்பிரமணிய சுவாமி

                • இந்தியாவிலேயே மிகப்பெரிய தனியார் மருத்துவமனைகள் இருப்பதும், குறிப்பாக புத்திசாலிகள் அதிகமாக இருப்பதும் தமிழகத்தில்தான்”-தமிழக நிதியமைச்சர் க.அன்பழகன் புதுக்கோட்டை பிரச்சாரக் கூட்டத்தில்.

                  • காங்கிரஸ் கட்சியின் பார்வையில் வளர்ச்சி என்பது ஏழைகள் உள்பட அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே ஆகும்”-காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி (சென்னைப் பிரச்சாரத்தில்)

                    • மத்திய அமைச்சர் மு.க.அழகிரி செல்வாக்கு மிக்கவராக இருக்கிறார். மதுரை மக்களுக்குத் தேவையான நன்மைகளை அவர் செய்து வருகிறார்”-முதல்வர் மு.கருணாநிதி, மதுரை செய்தியாளர்களிடம்.

                      • தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி தொடர்கிறது. அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்று தேர்தல் ஆணையம் செயல்படுகிறது”-மத்திய அமைச்சர்  மு.க.அழகிரி

                        • மதுரை, மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் கோட்டை. இங்கு ரௌடிகள், வன்முறைச் செயல்கள் மூலம் கலவரத்தைத் தூண்டிவிடலாம் என்று நினைப்பவர்களின் திட்டம் நடக்காது”-சிரிப்பு நடிகர் வடிவேலு.

                          • நாடு வளர்ச்சியடைய மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்பட வேண்டும். அதற்கு மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சி நடக்க வேண்டும்”-ராகுல் காந்தி, புதுச்சேரி பொதுக்கூட்டத்தில்

                          No comments:

                          Related Posts Plugin for WordPress, Blogger...